வியாழன், 20 செப்டம்பர், 2012

Some verses of Thiru Gnaanasambandhar - Vol II



திருமுன்பாட திருமுறைப்பாடல்கள் சில





----------------------------------------------------------------
          INDEX

         1. எரித்தவன் முப்புரம்

         2. அவ்வினைக்கு இவ்வினை

         3. ஒருருவாயினை

         4. மந்திரமாவது நீறு

         5. வேயுறு தோளிபங்கன்

         6. இடரினும் தளரினும்

         7. துஞ்சலும் துஞ்சலிலாத

         8. மண்ணில் நல்லவண்ணம்

         9. காதலாகிக் கசிந்து

        10. யமாமா நீ யாமாமா

        11. மகயர்க்கரசி வளவர்கோன்

        12. விங்குவிளை கழனிமிகு

        13. வாழ்க அந்தணர்
----------------------------------------------------------------
1.113 திருவல்லம்

பண் - வியாழக்குறிஞ்சி



எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்

தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு

தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே



தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்

தூயவன் தூமதி சூடியெல்லாம்

ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்

சேயவன் உறைவிடந் திருவல்லமே


பார்த்தவன் காமனைப் பண்பழியப்

போர்த்தவன் போதகத் தின்னுரிவை

ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று

சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே


கொய்தஅம் மலரடி கூடுவார்தம்

மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்

பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்

செய்தவன் உறைவிடந் திருவல்லமே


சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்

நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்

தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே

சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே


பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்

உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று

விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று

சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே


இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்

ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்

நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே

திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே


பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய

அரியவன் அருமறை யங்கமானான்

கரியவன் நான்முகன் காணவொண்ணாத்

தெரியவன் உறைவிடந் திருவல்லமே


அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்

குன்றிய அறவுரை கூறாவண்ணம்

வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்

சென்றவன் உறைவிடந் திருவல்லமே


கற்றவர் திருவல்லங் கண்டுசென்று

நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன

குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்

பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வல்லநாதர், தேவியார் - வல்லாம்பிகையம்மை.


திருச்சிற்றம்பலம்

--0--

1.116 திரு நீலகண்டம்

பண் - வியாழக்குறிஞ்சி



திருக்கொடிமாடச்செங்குன்றம்


அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்

விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்

புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே

கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்

கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்

செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே

உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்

செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்

சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்

பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்

தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்

இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்

திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே


இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்

கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.




திருச்சிற்றம்பலம்

--0--

1.128 திருவெழுகூற்றிருக்கை

பண் - வியாழக்குறிஞ்சி





ஓருரு வாயினை மானாங் காரத்

தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்

படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை

இருவரோ டொருவ னாகி நின்றனை


ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்

முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி

காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை

இருநதி யரவமோ டொருமதி சூடினை

ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்


நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்

திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை

ஒருதனு இருகால் வளைய வாங்கி

முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்


கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்

முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்

ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ

டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து


நான்மறை யோதி ஐவகை வேள்வி

அமைத்தா றங்க முதலெழுத் தோதி

வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை


இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை

பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை

பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த

தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை



வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்

விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை


ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை

எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை

ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்

மறை முதல் நான்கும்


மூன்று காலமுந் தோன்ற நின்றனை

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்


அனைய தன்மையை யாதலின் நின்னை

நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே.



திருச்சிற்றம்பலம்

--0--












2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்

பண் - காந்தாரம்


 

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே


வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே


அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே


இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே


மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட

கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு

அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே


ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே



திருச்சிற்றம்பலம்

--0--

2.85 கோளறு திருப்பதிகம்

பண் - பியந்தைக்காந்தாரம்



வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

       மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

       சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க

       எருதேறி யேழை யுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

       உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்

       உடனாய நாள்க ளவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து

       உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

       திசை தெய்வ மானபலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே



மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து

       மறையோது மெங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்

       கொடுநோய்க ளான பலவும்

அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்

       விடையேறும் நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு

       மிகையான பூத மவையும்

அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்

       மடவாள் தனோடு முடனாய்

நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்

       உளமே புகுந்த அதனால்

கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்

       கொடுநாக மோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக

       விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்

       வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல


       அடியா ரவர்க்கு மிகவே


வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து

       மடவாள் தனோடும் உடனாய்

வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்

       உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்

       இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


பலபல வேடமாகும் பரனாரி பாகன்

       பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்

       வருகால மான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே



கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு

       குணமாய வேட விகிர்தன்

மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்

       திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி

       வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

       மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து

       நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

       அரசாள்வர் ஆணை நமதே

திருச்சிற்றம்பலம்

--0--


3. 004 திருவாவடுதுறை

பண் - காந்தாரபஞ்சமம் ( நாலடி மேல்வைப்பு )




இடரினுந் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்

வீழினும் உனகழல் விடுவேனல்லேன்

தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்

போழிள மதிவைத்த புண்ணியனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


நனவினுங் கனவினும் நம்பாவுன்னை

மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்

புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த

கனலெரி யனல்புல்கு கையவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்

அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்

கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்

மும்மதிள் எரியெழ முனிந்தவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


கையது வீழினுங் கழிவுறினுஞ்

செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்

கொய்யணி நறுமலர் குலாயசென்னி

மையணி மிடறுடை மறையவனே


   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே



வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்

எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா

ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த

சந்தவெண் பொடியணி சங்கரனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


வெப்பொடு விரவியோர் வினைவரினும்

அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா

ஒப்புடை யொருவனை உருவழிய

அப்படி அழலெழ விழித்தவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்

சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்

ஏருடை மணிமுடி இராவணனை

ஆரிடர் படவரை யடர்த்தவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்

ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்

கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்

அண்ணலும் அளப்பரி தாயவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்

அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்

புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்

பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


அலைபுனல் ஆவடு துறையமர்ந்த

இலைநுனை வேற்படை யெம்மிறையை

நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன

விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்

   வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்

   நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே



திருச்சிற்றம்பலம்


--0--




















 








3. 022 திருப்பஞ்சாக்கரப்பதிகம்

பண் - காந்தாரபஞ்சமம்





துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்

றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே


மந்திர நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்

கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே


ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்

தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்

ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே




நல்லவர் தீயரெ னாது நச்சினர்

செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ

கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்

தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே


கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்

தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்

தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை

அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்

அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே


வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பின்னை நாடொறும்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே


வண்டம ரோதி மடந்தை பேணின

பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன

தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்

கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே


கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்

சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்

பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்

கார்வண மாவன அஞ்செ ழுத்துமே


புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்

சித்தத் தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறணி வார்வி னைப்பகைக்

கத்திர மாவன அஞ்செ ழுத்துமே


நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்

துற்றன வல்லவர் உம்ப ராவரே



திருச்சிற்றம்பலம்

--0--





3. 024 திருக்கழுமலம்

பண் - கொல்லி





மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்

கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே


போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்

தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்

காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்

பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே


தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்

வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்

கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்

பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே


அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே

நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்

கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்

பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே


அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே

விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்

கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்

பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே


மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல

கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்

சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்

பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே


குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே

நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்

கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்

பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே


அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட

நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே

கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்

பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே


நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்

அடியொடு முடியறி யாவழல் உருவினன்

கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்

பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே


தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்

ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்

காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்

பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே


கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்

பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை

அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்

விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே



திருச்சிற்றம்பலம்

--0--
















3. 049 நமச்சிவாயத் திருப்பதிகம்

பண் - கௌசிகம்





காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி

ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே


நம்பு வாரவர் நாவி னவிற்றினால்

வம்பு நாண்மலர் வார்மது வொப்பது

செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்

நம்பன் நாமம் நமச்சி வாயவே


நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்

தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்

தக்க வானவ ராத்தகு விப்பது

நக்கன் நாமம் நமச்சி வாயவே



இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்

நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்

நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி

நயனன் நாமம் நமச்சி வாயவே


கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்

இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்

நல்லார் நாமம் நமச்சி வாயவே


மந்த ரம்மன பாவங்கள் மேவிய

பந்த னையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சி வாயவே


நரக மேழ்புக நாடின ராயினும்

உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்

விரவி யேபுகு வித்திடு மென்பரால்

வரதன் நாமம் நமச்சி வாயவே


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்

தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்

மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை

நலங்கொள் நாமம் நமச்சி வாயவே


போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்

பாதந் தான்முடி நேடிய பண்பராய்

யாதுங் காண்பரி தாகி அலந்தவர்

ஓதும் நாமம் நமச்சி வாயவே


கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்

வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்

விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்

நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே


நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்

சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்

சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்

பந்த பாசம் அறுக்கவல் லார்களே

திருச்சிற்றம்பலம்

--0--




3.117 சீர்காழி - திருமாலைமாற்று

பண் - கௌசிகம்





யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.


யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.



தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.


நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.


யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ

வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.


மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே

யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.


நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே

நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.


னேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா

காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.


காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.


வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.


நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா

காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.



திருச்சிற்றம்பலம்


--0--





3.120 திருஆலவாய்

பண் - புறநீர்மை



மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

       வரிவளைக் கைம்மட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

       பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழ லுருவன் பூதநா யகனால்

       வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த

       ஆலவா யாவதும் இதுவே.


வெற்றவே யடியார் அடிமிசை வீழும்

       விருப்பினன் வெள்ளைநீ றணியுங்

கொற்றவன் றனக்கு மந்திரி யாய

       குலச்சிறை குலாவி நின்றேத்தும்

ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்

       உலகினில் இயற்கையை யொழிந்திட்

அற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.


செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்

       சிவன்திரு நீற்றினை வளர்க்கும்

பந்தணை விரலாள் பாண்டிமா தேவி

       பணிசெயப் பாரிடை நிலவுஞ்

சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்

       கம்மலர் வன்னி

அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.


கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்

       அடியவர் தங்களைக் கண்டால்

குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங்

       கோபுரஞ் சூழ்மணிக் கோயில்

மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்

       வன்னிவண் கூவிள மாலை

அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.


செய்யதா மரைமேல் அன்னமே யனைய

       சேயிழை திருநுதற் செல்வி

பையர வல்குற் பாண்டிமா தேவி

       நாடொறும் பணிந்தினி தேத்த

வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான்

       விரிகதிர் மழுவுடன் தரித்த

ஐயனார் உமையோ டின்புறு கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.




நலமில ராக நலமதுண் டாக

       நாடவர் நாடறி கின்ற

குலமில ராகக் குலமதுண் டாகத்

       தவம்பணி குலச்சிறை பரவுங்

கலைமலி கரத்தன் மூவிலை வேலன்

       கரியுரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.


முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும்

       நீறுந்தன் மார்பினின் முயங்கப்

பத்தியார் கின்ற பாண்டிமா தேவி

       பாங்கொடு பணிசெய நின்ற

சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே

       சுடர்மர கதமடுத் தாற்போல்

அத்தனார் உமையோ டின்புறு கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.


நாவணங் கியல்பாம் அஞ்செழுத்

       தோதி நல்லராய் நல்லியல் பாகுங்

கோவணம் பூதி சாதனங் கண்டால்

       தொழுதெழு குலச்சிறை போற்ற

ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோள்

       இருபதும் நெரிதர வூன்றி

ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.





மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும்

       மணிமுடிச் சோழன்றன் மகளாம்

பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி

       பாங்கினாற் பணிசெய்து பரவ

விண்ணுளார் இருவர் கீழொடு மேலும்

       அளப்பரி தாம்வகை நின்ற

அண்ணலார் உமையோ டின்புறு கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.


தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்

       தொழுதுதன் குணத்தினைக் குலாவக்

கண்டுநா டோ றும் இன்புறு கின்ற

       குலச்சிறை கருதிநின் றேத்தக்

குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்

       குறியின்கண் நெறியிடை வாரா

அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த

       ஆலவா யாவதும் இதுவே.


பன்னலம் புணரும் பாண்டிமா தேவி

       குலச்சிறை யெனுமிவர் பணியும்

அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன்

       திருவடி யாங்கவை போற்றிக்

கன்னலம் பெரிய காழியுள் ஞான

       சம்பந்தன் செந்தமி ழிவைகொண்

டின்னலம் பாட வல்லவர் இமையோர்

       ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

திருச்சிற்றம்பலம்

--0--

3.72 திருமாகறல் - திருவிராகம்

பண் - சாதாரி




விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்

மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்

கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்

செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.


கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்

மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்

இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்

அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.


காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்

மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்

தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்

பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.


இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே

மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்

கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே

நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.


துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்


மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்

வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்

நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.


மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்

இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்

மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே

உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.


வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர்

மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்

கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்

ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.


தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே

மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்

பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்

பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.


தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்

பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்

சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்

ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.


காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்

மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்

நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்

ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.


கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்

அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்

மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே

உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர்

தேவியார் - புவனநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--































 




  3.054 திருப்பாசுரம்
பண் - கௌசிகம்


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்

எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்

கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்

பெரிய ராரறி வாரவர் பெற்றியே.


வெந்த சாம்பல் விரையெனப் பூசியே

தந்தை யாரொடு தாயிலர் தம்மையே

சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்

எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.


ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்

கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா

கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை

தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.


ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்

சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி

மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.


ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்

பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்

கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்

நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.


கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல

படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு

முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி

அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.


வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்

ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்

பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த

சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.


பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்

பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி

நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்

போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.



மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்

பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்

காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த

ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.



அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்

தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்

பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்

பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.


நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல

எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்

பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்

வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.


திருச்சிற்றம்பலம்

--0--

அன்புடன்

செல்வமுனி இல்லத்தார்

Some verses of Thiru Gnanasambandhar - Vol I


திருமுன்பாட திருமுறைப்பாடல்கள் சில



----------------------------------------------------------------

          INDEX


         1. தோடுடைய செவியன்


         2. சடையா யெனுமால்


         3. கண்காட்டு நுதலானுங்


         4. உண்ணாமுலை உமையாளொடும்


         5. மடையில் வாளை


         6. அந்தமும் ஆதியு மாகிய


         7. துணிவளர் திங்கள்


         8. மறையுடையாய் தோலுடையாய்


         9. பூத்தேர்ந் தாயன கொண்டுநின்


        10. வாசி தீரவே


        11. நன்றுடையானைத் தீயதிலானை


        12. பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்


        13. உற்றுமை சேர்வது மெய்யினையே


----------------------------------------------------------------






1.1 திருப்பிரமபுரம்

பண் - நட்டபாடை

திருபிரமபுரம்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு

வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்

கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்

பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி

ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்

ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்

பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்

உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்

மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்

பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன

அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்

பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே




மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி

இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்

கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்

பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த

உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்

கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்

பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த

உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்

துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்

பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்

நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்

வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்

பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா

ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்

பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய

பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த

திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே



திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.

திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.



திருச்சிற்றம்பலம்

--0--






2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம்

பண் - இந்தளம்

திருமருகல்


சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்

விடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே


சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்

முந்தா யெனுமால் முதல்வா எனுமால்

கொந்தார் குவளை குலவும் மருகல்

எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே


அறையார் கழலும் மழல்வா யரவும்

பிறையார் சடையும் முடையாய் பெரிய

மறையார் மருகல் மகிழ்வா யிவளை

இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே


ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்

பலிநீ திரிவாய் பழியில் புகழாய்

மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை

மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே


துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன

மணிநீ லகண்ட முடையாய் மருகல்

கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்

அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே








பலரும் பரவப் படுவாய் சடைமேல்

மலரும் பிறையொன் றுடையாய் மருகல்

புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்

தலரும் படுமோ அடியா ளிவளே


வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா

எழுவாள் நினைவாள் இரவும் பகலும்

மழுவா ளுடையாய் மருகல் பெருமான்

தொழுவா ளிவளைத் துயராக் கினையே


இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்

துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்

வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்

அலங்கல் லிவளை அலராக் கினையே


எரியார் சடையும் மடியும் மிருவர்

தெரியா ததோர்தீத் திரளா யவனே

மரியார் பிரியா மருகற் பெருமான்

அரியாள் இவளை அயர்வாக் கினையே


அறிவில் சமணும் மலர்சாக் கியரும்

நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்

மறியேந் துகையாய் மருகற் பெருமான்

நெறியார் குழலி நிறைநீக் கினையே


வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்

உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்

இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்

வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே



திருச்சிற்றம்பலம்

--0--














2.48 திருவெண்காடு

பண் - சீகாமரம்

திருவெண்காடு


கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்

பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்

பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே


பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை

வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்

வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே


மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி

எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்

பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்

விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே


விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்

மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்

கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே


வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்

மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்

ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே









தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்

ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்

பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே


சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்

அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய

மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்

முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே


பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த

உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்

கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க

விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே


கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்

ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்

வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்

றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே


போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்

பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்

வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்

றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே


தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்

விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்

பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்

மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்

தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--







1.10 திரு அண்ணாமலை

பண் - நட்டபாடை

திருவண்ணாமலை


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே


தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்

பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே


பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்

சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்

ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்

காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே


உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்

எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்

முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்

அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே


மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி

அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்

உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்

குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே





பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்

பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்

கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி

உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே


கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்

நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள

எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல

அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே


ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்

பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து

வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை

அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே


விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்

கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்

அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்

தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே


வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்

மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்

ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்

கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே


வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்

அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்

கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான

சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே


இது நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,

தேவியார் - உண்ணாமுலையம்மை




திருச்சிற்றம்பலம்

--0--







1.23 திருக்கோலக்கா

பண் - தக்கராகம்





மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான்

சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்

உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ


பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி

கொண்டான் கோலக் காவு கோயிலாக்

கண்டான் பாதங் கையாற் கூப்பவே

உண்டான் நஞ்சை உலக முய்யவே


பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்

கோணற் பிறையன் குழகன் கோலக்கா

மாணப் பாடி மறைவல் லானையே

பேணப் பறையும் பிணிக ளானவே


தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே


மயிலார் சாயல் மாதோர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தைதன்

குயிலார் சோலைக் கோலக் காவையே

பயிலா நிற்கப் பறையும் பாவமே



வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்

கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்

அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே


நிழலார் சோலை நீல வண்டினங்

குழலார் பண்செய் கோலக் காவுளான்

கழலால் மொய்த்த பாதங் கைகளாற்

தொழலார் பக்கல் துயர மில்லையே


எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை

முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்

குறியார் பண்செய் கோலக் காவையே

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே


நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்

ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்

கூற்ற முதைத்த குழகன் கோலக்கா

ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே


பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்

உற்ற துவர்தோ யுருவி லாளருங்

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றிப் பரவப் பறையும் பாவமே


நலங்கொள் காழி ஞான சம்பந்தன்

குலங்கொள் கோலக் காவு ளானையே

வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்

உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--









1.39 திருவேட்களம்

பண் - தக்கராகம்
திருவேட்களம்


அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்

       ஆரழ லங்கை அமர்ந்திலங்க

மந்த முழவம் இயம்ப

       மலைமகள் காண நின்றாடிச்

சந்த மிலங்கு நகுதலை கங்கை

       தண்மதியம் மயலே ததும்ப

வெந்தவெண் ணீறு மெய்பூசும்

       வேட்கள நன்னக ராரே


சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்

       சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்

புடைதனிற் பாரிடஞ் சூழப்

       போதரு மாறிவர் போல்வார்

உடைதனில் நால்விரற் கோவண ஆடை

       உண்பது மூரிடு பிச்சைவெள்ளை

விடைதனை ஊர்தி நயந்தார்

       வேட்கள நன்னக ராரே


பூதமும் பல்கண மும்புடை சூழப்

       பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்

சீதமும் வெம்மையு மாகிச்

       சீரொடு நின்றவெஞ் செல்வர்

ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை

       உள்ளங் கலந்திசை யாலெழுந்த

வேதமும் வேள்வியும் ஓவா

       வேட்கள நன்னக ராரே


அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்

       அமையவெண் கோவணத் தோடசைத்து

வரைபுல்கு மார்பி லோராமை

       வாங்கி யணிந் தவர்தாந்

திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்

       தேனலங் கானலில் வண்டுபண்செய்ய

விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த

       வேட்கள நன்னக ராரே


பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்

       பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த

பெண்ணுறு மார்பினர் பேணார்

       மும்மதில் எய்த பெருமான்

கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்

       கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்

வெண்ணிற மால்விடை அண்ணல்

       வேட்கள நன்னக ராரே


கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்

       கண்கவ ரைங்கணை யோனுடலம்

பொறிவளர் ஆரழ லுண்ணப்

       பொங்கிய பூத புராணர்

மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்

       மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை

வெறிவளர் கொன்றையந் தாரார்

       வேட்கள நன்னக ராரே


மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை

       மாமலை வேந்தன் மகள்மகிழ

நுண்பொடிச் சேர நின்றாடி

       நொய்யன செய்யல் உகந்தார்

கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்

       காலனைக் காலாற் கடிந்துகந்தார்

வெண்பொடிச் சேர்திரு மார்பர்

       வேட்கள நன்னக ராரே




ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்

       அமுத மமரர்க் கருளி

சூழ்தரு பாம்பரை யார்த்துச்

       சூலமோ டொண்மழு வேந்தித்

தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்

       தண்மதி யம்மய லேததும்ப

வீழ்தரு கங்கை கரந்தார்

       வேட்கள நன்னக ராரே


திருவொளி காணிய பேதுறு கின்ற

       திசைமுக னுந்திசை மேலளந்த

கருவரை யேந்திய மாலுங்

       கைதொழ நின்றது மல்லால்

அருவரை யொல்க எடுத்த வரக்கன்

       ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த

வெருவுற வூன்றிய பெம்மான்

       வேட்கள நன்னக ராரே


அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்

       யாதுமல் லாவுரை யேயுரைத்துப்

பொய்த்தவம் பேசுவ தல்லால்

       புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்

முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச

       மூரிவல் லானையின் ஈருரி போர்த்த

வித்தகர் வேத முதல்வர்

       வேட்கள நன்னக ராரே


விண்ணியன் மாடம் விளங்கொளி

       வீதி வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க

நண்ணிய சீர்வளர் காழி

       நற்றமிழ் ஞானசம் பந்தன்

பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து

       பேணிய வேட்கள மேல்மொழிந்த

பண்ணியல் பாடல் வல்லார்கள்

       பழியொடு பாவமி லாரே







இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்

--0--


1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.

பண் - தக்கராகம்

திருப்பாச்சிலாச்சிராமம்


துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்

       சுடர்ச்சடை சுற்றி முடித்துப்

பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ

       வாரிடமும் பலி தேர்வர்

அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

மணிவளர் கண்டரோ மங்கையை வாட

       மயல்செய்வ தோயிவர் மாண்பே


கலைபுனை மானுரி தோலுடை யாடை

       கனல்சுட ராலிவர் கண்கள்

தலையணி சென்னியர் தாரணி மார்பர்

       தம்மடி கள்ளிவ ரென்ன

அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

இலைபுனை வேலரோ ஏழையை வாட

       இடர்செய்வ தோயிவ ரீடே


வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை

       வேண்டுவர் பூண்பது வெண்ணூல்

நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக

       நண்ணுவர் நம்மை நயந்து

மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்

       சிதைசெய்வ தோவிவர் சீரே


கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்

       கனல்தரு தூமதிக் கண்ணி

புனமலர் மாலை யணிந் தழகாய

       புனிதர் கொலாமிவ ரென்ன

வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

மனமலி மைந்தரோ மங்கையை வாட

       மயல்செய்வ தோவிவர் மாண்பே


மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி

       வளர்சடை மேற்புனல் வைத்து

மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை

       முதிரவோர் வாய்மூரி பாடி

ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

சாந்தணி மார்பரோ தையலை வாடச்

       சதுர்செய்வ தோவிவர் சார்வே


நீறுமெய்பூசி நிறைசடை தாழ

       நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி

ஆறது சூடி ஆடர வாட்டி

       யைவிரற் கோவண ஆடை

பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

ஏறது ஏறியர் ஏழையை வாட

       இடர்செய்வ தோவிவ ரீடே






பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ

       டாமைவெண் ணூல்புனை கொன்றை

கொங்கிள மாலை புனைந் தழகாய

       குழகர்கொ லாமிவ ரென்ன

அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்

       சதிர்செய்வ தோவிவர் சார்வே


ஏவலத் தால்விச யற்கருள் செய்து

       இராவண னையீ டழித்து

மூவரி லும்முத லாய்நடு வாய

       மூர்த்தியை யன்றி மொழியாள்

யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்

       சிதைசெய்வ தோவிவர் சேர்வே


மேலது நான்முக னெய்திய தில்லை

       கீழது சேவடி தன்னை

நீலது வண்ணனு மெய்திய தில்லை

       எனவிவர் நின்றது மல்லால்

ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்

       பழிசெய்வ தோவிவர் பண்பே


நாணொடு கூடிய சாயின ரேனும்

       நகுவ ரவரிரு போதும்

ஊணொடு கூடிய உட்குந் தகையார்

       உரைக ளவைகொள வேண்டா

ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்

       புனைசெய்வ தோவிவர் பொற்பே


அகமலி அன்பொடு தொண்டர் வணங்க

       ஆச்சிரா மத்துறை கின்ற

புகைமலி மாலை புனைந் தழகாய

       புனிதர்கொ லாமிவ ரென்ன

நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி

       நற்றமிழ் ஞானசம் பந்தன்

தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்

       சாரகி லாவினை தானே



முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்

மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில்


தீர்ந்தது.


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.





திருச்சிற்றம்பலம்

--0--
1.52 திருநெடுங்களம்

பண் - பழந்தக்கராகம்




மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்

குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த

நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்

தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை

மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்

நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்

அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா

தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்

நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்

தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்

தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்

நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்

நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்

மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்

ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த

நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை

அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்

என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்

நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே


வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்

சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்

கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்

நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே


வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்

தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்

துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே

நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்

சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்

நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன

பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்

--0--


1.54 திருஓத்தூர்

பண் - பழந்தக்கராகம்



திருவோத்தூர்


பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே


இடையீர் போகா இளமுலை யாளையோர்

புடையீ ரேபுள்ளி மானுரி

உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்

சடையீ ரேயும தாளே


உள்வேர் போல நொடிமையி னார்திறம்

கொள்வீ ரல்குலோர் கோவணம்

ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்

கள்வீ ரேயும காதலே


தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை

ஆட்டீ ரேயடி யார்வினை

ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்

நாட்டீ ரேயருள் நல்குமே


குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள் வீர்திரு வோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்

அழையா மேயருள் நல்குமே


மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்

தக்கார் தம்மக்க ளீரென்

றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்

நக்கீ ரேயருள் நல்குமே


தாதார் கொன்றை தயங்கு முடியுடை

நாதா என்று நலம்புகழ்ந்

தோதா தாருள ரோதிரு வோத்தூர்

ஆதீ ரேயருள் நல்குமே


என்றா னிம்மலை யென்ற அரக்கனை

வென்றார் போலும் விரலினால்

ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்

என்றார் மேல்வினை யேகுமே


நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச்

சென்றார் போலுந் திசையெலாம்

ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்

நின்றீ ரேயுமை நேடியே


கார மண்கலிங் கத்துவ ராடையர்

தேரர் சொல்லவை தேறன்மின்

ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்

சீர வன்கழல் சேர்மினே


குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்

அரும்பு கொன்றை யடிகளைப்

பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்

விரும்பு வார்வினை வீடே


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--


1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி


திருவீழிமிழலை


வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே


இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே


செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவினீர், உய்ய நல்குமே


நீறு பூசினீர், ஏற தேறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே


காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே


பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே


மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே


அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே


அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே


பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே


காழி மாநகர், வாழி சம்பந்தன்

வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே



இது படிக்காசு சுவாமியருளியபோது வாட்டந்தீர ஓதியது.



திருச்சிற்றம்பலம்

--0--



1.98 திருச்சிராப்பள்ளி

பண் - குறிஞ்சி


திருச்சிராப்பள்ளி



நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே







கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்

செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி

வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ

பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே


மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்

செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்

சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்

எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே


துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்

சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்

கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்

பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே


கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்

சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்

தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்

நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே


வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது

செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்

தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்

ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே


வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்

சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்

பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்

தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே


மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்

தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்

சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்

சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே


அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்

கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த

சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்

இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே


நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை

ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்

பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்

சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே


தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த

கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்

ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்

வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--


1.69 திரு அண்ணாமலை

பண் - தக்கேசி

திருவண்ணாமலை



பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்

மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்

தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்

ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே


மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்

நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்

வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி

அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே





ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்

ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்

ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்

ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே


இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்

தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்

பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்

அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே


உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்

செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்

பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்

அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே


எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்

நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்

கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத

அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே


வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு

பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்

முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்

அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே


மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்

நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்

திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட

அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே


தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை

மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு

கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்

றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே


தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்

பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்

வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்

அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே


அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை

நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்

சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று

வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே





திருச்சிற்றம்பலம்

--0--





3. 113 திருக்கழுமலம் திருஇயமகம்

பண் - பழம்பஞ்சுரம்





திருக்கழுமலம்





உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே

கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே

அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே

பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.



சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே

அதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்

மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே

விதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.



காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே

பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனே

தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே

போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.



மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே

மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே

பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே

வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.



உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை மாதவனே

திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே

படங்கொள் அரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே

தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.



திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே

இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில் மானிடமே

மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே

தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே.



ஓர்வரு கண்கள் இணைக்கயலே உமையவள் கண்கள் இணைக்கயலே

ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன னாகமதே

நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே

சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.



ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனே

தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே

வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையே

பூண்டனர் சேரலு மாபதியே புறவம் அமர்ந்த வுமாபதியே.



நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே

உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே

கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனே

மன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.





இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே

புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே

இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனே

கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.



கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே

மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே

நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே

பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.



பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே

வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே

கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே

மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.





திருச்சிற்றம்பலம்

--0--


அன்புடன்

    செல்வமுனி இல்லத்தார்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

Petals of Lotus - Kamalasmiruthi Volume - 2



                            Kamala Kanni Amman - Kalavai

1. Mother

Sarve Bavanthu Sukinah
Let every human life in peace
Let all communities live in harmony
Let the individuality of all be maintained
May God bless all
Mother - relieve the pains
Let the afflictions be removed
Let all sufferings come to an end

2. Mother

I surrender to you
Take care of my heart
Take care of my mind
Let the sun show the path
Let there be light
A great good is going to happen
I am going through the final examination
The Spiritual World Government will function now
As I think, so I become
So I suffer
Let there be light
Let me think positively

Si-va-ya-na-ma
People want to meditate
Each one has a purpose
Everyone wants to be peaceful
Everyone wants to be happy
God! I should bring happiness to all human beings
I should be the fountain head of all
happiness and bliss.
I am peace
I am happiness
I am the fountain head
I am Rudhra

3. Mother of Mine

Mother of all existence and non-existence
Merged in me and transcending all form and name
Mother of being and becoming
Walking, running, flowing, non-moving and all that
Yet you are my mother
One hundred percent

4. Scattered clouds serve You

Battered brains yearn to see you
Mother,
Mindless man tries to overtake you
Mother,
The golden cloud, the empty mind and
The embryo of zero leads to the seed of Music
Phallic graphs abound on rocky terrain
Light oozing out of the moon gather dew drops on grass tops
Mother,
I see you in every drop of light that flows round the bend
They churn the insides of the abdomen of the earth
Clouds black, gold and silver bring hope
Sounds and graphs man grasps
Oh!
Mother!
It is just you!
I marvel Mother
Yellow and red meet and mingle in the horizon
Breaking into thousands of skies.
Marvel!

5. Mother

Are they tricks of your eyes
Boundless space, conscious of time
Do you move the universe in any direction?

6. Mother

Every grain of sand reflects you
Every water drop reflects you
You go into me through my breath and you,
The fire in the sun,
Burn the karma in my navel!

7. Mother

Every single day my love doubles
Arithmetic progression?
When will it be full?
To day is the twenty ninth day
Strangely you provide cosmic relief
Right in the middle of
" To be or not to be!"
Will you make me 'pied piper'?
To get rid of plague?

8. Oh Mother!

When you stood on fire before
I was born and for sixteen years
I struggled
Even now the struggle is not over, through,
You have provided a number of breaks of Cosmic Relief
Oh!
Mother!
The second Lotus petals shall be the
More intimate you

9. Mother

Your infinite compassion - almost pushes me to a dead end
To my breaking point and then
Brings me back
Mother!
Your infinite grace is cruelly kind
When I think I am drowning
You lift me up
Please don't toss me like an orphan wood
On the waves of the ocean
Mother!
If it is meditation, seminar, reading, writing anything
Get me out of the net
I have cast on myself
I must do what I have to do
Mother!
Free me from unnecessary worries
Why do I feel so miserable when you are there
Mother!
Lift me out of this quagmire of uncertainty and humiliation
Oh! Mother!
Please lift me out of this rut
Let me go my way!
Mother!
Be compassionate
I submit everything to your feet

10. Mother

I am not you
Mother!
Who am I?
Who am I to worry
You are everything
Mother!
You are the giver of comfort and pain
I surrender to you
I shall only remain in Poorna Pragjna
Poorna Pragjna will be the panacea for all the maladies my ego suffers
Mother!
This is my prayer
That my peace should emanate from within and bring peace to all
I must stop thinking
Praising failure?

11. Mother

Your eyes bring light to my life
Mother, Adhi Sakthi
I Surrender.
Mother,
The pinnacle has to be reached with your grace
I don't understand the cause of adversity
Mother,
Leaf, cloud sighs of greed unfulfilled
Mother,
Why do people passionately cling to mystery

12. Mother

I have many questions
Since I live in the mundane world with average human beings
I should understand how your law
Working in the mundane
All great men and great books
Glorify poverty
They say ' Failures are stepping stones to success '
They find all obstacles are tests by you
Don't you think that we all should be very
Pleased if we become poor?
Don't you think We should feel elated every time we fail?
Don't you think I should feel healthy
When I am terribly ill?
Mother,
Is it not a great hypocrisy?
To earn money
Eulogizing poverty?
To succeed
Praising the Failure

13. Mother

The divine cybernetics mother,
The rita of Rig vedha
Is the universal order
" Ruler of scarifies, guard of Law eternal, radiant one "
Mother,
You maintain this order
Why do so many human beings rave about their roles?
The self importance of each makes one assume the role of mother, but
Mother,
You are rita
You are the divine order
Let me not fall out of order by my ego

14. Mother

In out tiny huge light heavy
Erase all things between
Thoughts and fulfillment
There must be no karma
Transcend everything
Mother,
The emerging light is so fulfilling
May all the pure awareness experience the bliss I experience
Mother,
Ripples of bliss rise and expand
Let the whole world be balanced in my light
At the end of all effort, struggle and mystery
To extricate my self from the web of karma
I stand here fully aware of my nature
I am bliss
I am Rudhra
I shall never have to yield to the yoke of matter
Like Shelly, I pray
Scatter my thoughts of harmony and peace
I shall talk, think and do only God
Nothing else is real.

15. Mother

The viscous love of traders is cloying
Mother,
I am pure will and love
Even you are selective
Mother,
I am so ignorant that I know not the world
Though of course I wonder the world and all its wonders
Mother,
My ignorance has made me rather too inadequate

16. Poorna is full

You fill the gap
That's great
I am just Rudhra
I create and sustain
My universe
Thanks for this freedom

17. God is great

Mother!
Glued to my awareness is a sense of senseless gloom
Which I am not able to cast away
Mother!
Let there be Pease in my mind
From the core of my being
Let ripples of Pease emanate and
Touch every particles in the universe
Mother!
Let there be Pease
Let me sit in my core and meditate
The positive waves should engulf the whole human world
Mother!
It is your will
I shall govern this universe from my core
Mother!
Help me enter my core
God is only reality,
who am I?

18. Mother

Drone of Sisyphus, rock rolling endlessly
Ceaseless solutions to problems
Eternal silence - Oh where?
Every time I gloat over my tiny success and understand,
That is not all
Mother!
This world should experience more Pease
Wanting, in adequacy and greed are the cause of suffering
May they all feel fulfilled

19. Mother

Great distance and vast time
The futility of small success-Oh God
Yet when mind becomes small
Small matters fill the mind full.
Mother!
I prayed
My prayers are being answered
Many little signs of blessings make my life a flow of bliss
God, this flow should continue and
I should be aware and remember it always
Singing your glory
I shall live for ever

20. Mother

Though I have abandoned all
There is a very invisible bondage
Which Keeps pulling me away from you and
Makes me rather miserable?

As it is, logically speaking,
I don't see any problem
But, yet there is a slight lingering pain
Mother!
Let the flow of bliss be uninterrupted
Words cannot bring out your compassion
Yet, I myself obstruct your love
Mother!
Fountain head, Charming top, Cool moon
Rolling down washing everything and feeding

21. Mother

Sprinkle Pease drops on all prickly hearts
All blades bear a drop of bliss each
Mother!
You are the cause and all
Mother!
You give, vowels hide you
You posses all
Consonants surround
Mother!
Create, distribute and fulfill
None wants Lakshmi
None worship
None pray to Lakshmi
All pray for something
Pacify the greedy

22. Mother

Surya is the center
All are around
The earth is also a part
Sadness and happiness are just thoughts of mistery and pleasure
Prana is existing
Mother is manifested energy

23. Mother

The vast experience is me every where
How can I contract myself into this body
And miss my freedom so big?
What strong bonds, tie me down to all
People - Actions, events and notions!
Freedom from ideas, philosophy and things
Mother!
That is my purpose!

24. Mother

Perfection is my name
Small to big
Dull to light
All are attributes
You are the thief
You are darkness
You are light
You are me
The eighty, thirty and sixty four and the rest are you
Mother!
What are you not?

25. Mother

When we received each other
I was amazed
What did you feel?
What did you think?
Why did you humiliate me so much?
How did you have a heart to laugh when I suffered?
For what purpose did you dip me in acid
Put me on fire
Threw me into the abysmal chasm?
What pleasure did you experience in my pain?
You are the worst sadist in this universe
Mother!
May be some day you will experience the pangs
When you become my mother
You can't be happy when I am unhappy
Oh Mother!
I worship you

26. Mother

The meaningless search,
Anxiety and wanting to achieve, what?
Other than mother
What is there to reach?
I know, not just faith
I know
I know you are everything
Yet, forgetting
I grovel in mystery


By our beloved Guru

D. Gangadharan

Petals of Lotus - Kamalasmiruthi Volume - 1


 Kamala Kanni Amman - Kalavai
1. Mother

Expand in all directions
Scatter my thoughts of Pease
Let Pease sprout, grow, blossom
And the fragrance of Pease
Cleanse all corners of this world
Mother!
Let me establish Pease points all over the cosmos
Let there be Pease, Pease and only Pease

2. Mother

Sitting still
Clouds move - no will of their own
I will so still - Be still
No still No sound No vibration
No friction of thoughts
Cease all
And then Om
Reverberate, ceaseless thought
Endless madness
Empty and then full you be
Oh Mother!
I know
You know I know the secret

3. Mother

If I were you........
You must make it possible
Point of emanation of energy
Converge to manifest through me
Mother!
It is possible
Let there be harmony
All the ills that plague the world should be done away
Mother!
Through the ages mankind has been miserable
Finding pleasure in unhappiness
Mother!
You the creator, preserver and destroyer

4. Mother

Cinnamon is a spice
The other day in my mouth it rolled
Thoughts stopped
I watched my saliva
After the belch
I knew stomach could pose terrible impediments to reach you
Is stomach not you?

5. Mother

Redolent after rain of cinders of my burnt thoughts
I awaken myself to new thoughts of thunder
Of clouds and of parched earth move unmindful of all that befall the earth
I remain awake

6. Mother

Logic, reason, intellect all fail to perceive you
Not that I belie
I know you
But when you crush my ego
I know you
Rudra crushes Rudra to pulp
The excruciating pain and anguish
You are the creator and destroyer
When will you destroy this pain
Mother!
Here I am

7. Mother

At the dawn of thoughts
It is so beautiful
Repeated thoughts clog the mind
Even sweet thoughts are too cloying
Mother!
Let me free myself from thoughts

8. Mother

You are everything
You are every happening
You are my everything
Mother!
Let me empty myself
So that you may fill me with yourself
Mother!
Please keep all human beings in good health and Pease
I know all things are possible in you

9. Mother

Happy trees nod
Dark green cover shade the tiny plants
This is my prayer
Plants must be happy, flowers too
As they grow without much fuss
As they eat in silence
As they smile I forgot the mundane
Principle that governs spaces of future and
Escher's waterfall won't change the plants and their happiness
My prayer is that they be happy
Mother the eternal order is the truth
That is all!
Mother!

10. Mother

Mother of mine!
Leaves and twigs
Animals and insect
And the vast sky
I marvel at your expense when
You take me through the space to show me the shining creations
How do you remember every thing?
The least of creations: Me
You remember!
Oh Mother!
I am really fortunate

11. Mother

Your strange logic
I've been looking at you
Through human eyes
Mother !
Make me you so that I can see
Perceive, understand and carry out your will

12. Mother of Mine

You are a mine of Gold and Diamond
And all precious stones
Fine shrine my chamber of your heart
Mother!
And you are in mine
And sing my bones
To my Mother Chamundi
My interior decorator
My charming top owner
To you
I have dedicated everything
Surrendered
When you eyes gleam
Oh Mother!
The unit corners of my soul
Suddenly becomes bright
The odor of your breath gives me scent to the flowers
And pervades the surface and depth of my consciousness
Mother!
Your sweat is sweet
Your skin soft
Your hair silky
Mother!
You look very pretty
Damn sexy I should say
Mother!
When you hug me
My whole body melts
Mother!
My... My... what?
Is Eve
My wife or my Mother?
Mother of mine!
Language is mine
Thought is mine and
How can I trap you in my Mind
Mother of mine!
Who else exists beside me?
Mother!
Come down
Rake me
May your infinite compassion relieve me of all these
Mundane Chores

13. Mother

I am your mother
You are my mother
I gave birth to you and
You gave birth to me
And both our births are simultaneous
Mother!
Mother of my awareness,
The periphery and centre of
My being
Expanding me - we, You expand
Mother, my daughter, I am
Your daughter
How we bore each other!
Mother in our innermost source
Exist the principle
Scientists will continue to
Search the periphery
Mother!
How wonderful!
We gave birth to each other

14. Mother of Mine

Epitomes of Truth
Embodiment of Beauty
Culmination of Goodness
Pinnacle of Glory
Ocean of Compassion
Unconditional Love
What great attributes
Feel like a Linguistic beggar!
Mother!
You are ....
You be....
You become ....
Mother of Mine!
You ....
Me ....
You ....
Me .....
We ....
I .....

15. Mother

Mother of mine!
Take care of me
Enter me and be my guest
Keep me in good health
Make me efficient in this world
Make me your worthy instrument
Let us make the world peaceful
Harmonious and divine
Let there be happiness everywhere
Mother!
Climb down from your mountain abode
Come and do something for all
Those who suffer from this terrible ignorance

Mother!
Let there be peace everywhere
Mother!
Please make this world Harmonious
Set apart
Search, delve deep, and spread
Cosmic consciousness, six directions expand
Rich and richer and richer
There is always scope to grow richer

Awareness spreads, Knowledge happens
Super senses cross, Organs render useless
Phonon Photon Olfacton Taston Feelon
And merge
Lines disappear bonds break
Spread - where is darkness?

Devour the stars, my satellite station
Send and receive impulse
Rarified oxygen and all stay here and there
Where i and I merge
Light years I travel in mill moment
Commune is the language

Integrating language is the language
God! You are beautiful

16. Mother of mine

On 22nd Feb You entered me
It was such an experience
From then till October you saw me wriggle in pain,
Agony and all that is human
But why did you also
Suffer with me

When you gave me a glimpse of truth
On Oct 9, 1986
I thought you revealed everything... - No
1988 - 1989 you really put me through a Severe Acid Test
You are really very kind
Very cruelly kind

Mother of mine!
Are you being cruelly kind to others too?
Is it your infinite compassion that makes
So many so miserable?
Is that your compassion that makes the scoundrels prosper?
Yes ! You are so funny!
But you are very firm indeed!

Now look! I have passed all the tests
When is my graduation ceremony?
I would like all Siddhas, Rishis, Devas to witness the ceremony
Do it fast
It is dull to wait.

Mother of mine!
All Morales, code of conduct, ethics have lost their importance
Why do I care?
You are me
Mother,
How can I, being you, be a man
Fit into a framework?
Sarvam Brahmam, Aham Brahmasmi

17. Mother of mine

Mosquito song
Lions roar
Human groan
All are your manifestations


Mother of mine,
You are in me and me
How you filled my cells!
That was a year ago, almost
I knew the moment you entered
I was elated
Then why did you, being in every cell of mine,
Suffer with me - the man?
What pleasure did you derive?


Mother of mine,
I know and
I know and
Now I know
You are a wonderful mother

18. Mother of Mine

Greater than the greatest
Smaller than the smallest
Heavier than the heaviest
Lighter than the lightest
Farthest and nearest
Right, left, front, behind, above, below in all
Becoming a mango in mango tree
A calf in a cow

Now I know
I know that each produces it kind and
you produce your kind and therefore
Mother, my quest has ended
You can't hide from me
All that rubbish about difficult paths to reach you - ridiculous babbies
What I did not find in scriptures, Philosophies, Science
I find in a speck of dirt in my finger nail
Stop it,
I know what is Maya now
I can see you
Everywhere, unfortunately you've lost your privacy
Be a good mother and listen to me
Don't make me blind or deaf or dead to have your privacy
Become fully me
Wouldn't that be wonderful?
Then I dissolve in you
You have your privacy
I have my mother
How do you like the idea?

Don't just stand there and stare!
You love me too much to do anything else!
I am too dear to you to be lost

Dissolve me
This maya of changes
The purge and catharsis' are coming to an end.

How long can I tolerate?
You are so dull cause you're so slow
If you don't make me you
I shall rebel
Do you here?
I shall rebel

Don't act like a deaf creature
Do you not here me?
If I tear my heart it will hurt you
If I go on hunger strike you will be hungry
Cent of compassion for you I'm keeping my self fit
Why do you smile?
What's so funny about what I say?
The Divine Cybernetics


By my beloved Guru

D.Gangadharan

சனி, 3 அக்டோபர், 2009

Contentment



Fulfillment is an experience of every moment to Poorna friends. Conentment is the feeling of fulfillment. Being lazy and not doing any work, no interested in progress, not being enthusiastic, lack of interest, half hearted involvement in any work, talking and thinking purposeless thoughts and such should not be misconstructed as contentment.

Every moment one should live a full life. Moment to moment one experiences fulfillment. Fullfilment is not retirement from a job or throwing away the responsibility. Poorna is whole. Not that one finds ultimate fulfillment after certain years, not that one cannot live a life of conententment at the age of six.

The word contentment is used as a defence mechanism by those who can't accomplish anything. Contentment hss been used in many wrong ways. When a boy scores low marks his father does not say 'Well son, you should be contented with your marks'. When the son asks for more money, the father says ' You should be contented with this amount'. Why should the boy be satisfied with less money and not be satisfied with less marks?. The father's convenience has to be justified.!!

D.Gangadharan

An article from Poorna News letter



Dear Friends,

Let all creatures be happy
Let all human beings experience fulfilment
Let all men and women blossom into their fullness
Om... Poorna shallsend positive vibration to every particle in the universe

- D.Gangadharan

Every thought, every breath, every second, every action of sir was Poorna. A part of the whole is also whole. Now the part has merged with the absolute to become Poorna. Our Guruji may not be with us physically, but he shall be in our minds and in our meditations. He has now become poorna itself, and he will make every moment of our life, a fulfillment.

Nothing stays with us, but meditation. Sir had always insisted upon this. So, to say in touch with sir we don't need telephone lines, mobile phones, or long letters. We simply have to meditate.

(Published in Poorna News letter after our Guruj's death on 07-10-2004 - By editor)