செவ்வாய், 30 ஏப்ரல், 2013

Ever Existing Substance



பழம்பொருள்



மூச்சதனை உள்நிறுத்தி மூக்குநுனி பார்த்திருந்து

மூலப்பண் டாரமவன் முகவரியைத் தேர்ந்திருந்தேன்

மூலத்தின் மூலமவன் முகவரியில் நில்லாது

ஊனுயிரை ஊடறுத்து உலவுவதும் உணர்வேனோ


உணர்விட்ட உண்மைப்பொருள் உட்கலந்து உவகைதரும்

புனல்இட்ட மணியொளிர்ந்து புனல்ஒளிரும் நிறம்மாற்றும்

உடையிட்ட ஊடெனவும் பாவெனவும் நூல்வளரும்

அன்னவகை யப்பொருளின் இயல்புணர மாட்டேனோ


மாட்டாமை தனைமாற்றி மயக்கறுத்து  உய்வளிக்கும் 

இருப்பியக்கம் இரண்டினுக்கும் இடமளித்து உலகியற்றும் 

ஒண்பொருளின்  உயர்நோக்கை ஓங்கிவளர் அருட்திறத்தை

உளம்கொள்ள வொண்ணாது உன்மத்தன் ஆவேனோ


ஆவதுவும் அழிவதுவும் வாலறிவன் ஆக்கினையால்

வீழ்வதுவும் வாழ்வதுவும் வல்வினையின் ஊட்டுதலால்

பூப்பதுவும் பூத்தமலர்ப்  புனைவதுவும் அவன்தோளில்

என்றிருந்து தனிப்பொருளின் தண்ணடிகள் காண்பேனோ


கண்டுணர்ந்து உய்த்திருக்க கருவூலம் உள்ளிருக்க

தூய்மையினும்  தூய்மையென திகழ்கின்ற சோதியினை

கங்குபகல் காலமுற்றும் கலந்திருந்து களிப்பேனோ

கட்புலனில் அகப்பட்டு கதிமறந்து நிற்பேனோ


நின்று நிலைத்தப்பொருள் உயிர்த்துகளில் உலவுபொருள்

பற்று அறுத்தப்பொருள் பரஞ்ஞானம் தந்தபொருள்

கற்று தெளிந்தவர்க்கு கலவிகொள்ள உற்றபொருள்

வேற்று மனத்தினனாய் உற்றதனைத் தெளிவேனோ


தெளிந்துவளர் சித்தத்தில் ஜீவியப் பொருளெனவும்

விரிந்தநற் பேரறிவாய் விளைந்த நல்முத்தெனவும்

மலர்ந்தசெம் மனங்களிலே மாசற்ற சோதியுமாய்

விளங்குமவ் உயர்ப்பொருளை கற்றென்று தேர்வேனோ


தேர்ந்தநற் பொருளெனவே செப்பிடுவர்   அறம்நின்றோர்

சேர்ந்துறையும் காலமுற்றும் தீதறவே காத்துநிற்கும்

நேர்ந்தவெவ் வினையதனை வேரறுத்து நேர்படுத்தும்

சாரமாம் சித்பொருளை சார்ந்திருக்கப் பயில்வேனோ


பயின்றிங்கு பெற்றதெல்லாம் வானுலவும் பேரண்டம்

தெளிந்தவுயிர்  உணர்ந்ததுவோ நித்தியப் பேரமைதி

உழன்றுதினம் திரியுமனம் ஒன்றுமிடம் கண்டுணர்ந்து

சத்சித்து ஆனந்தத்தில் தனியிடத்து அமர்வேனோ


தனியமர்ந்து அறிந்தனரே நற்பொருளை நாடிநின்றோர்

திறம்வியந்து போற்றினரே அஃதுணர்த்தும் பெருநெறியை

சிரம்தாண்டி நின்றிலங்கும் சின்மயமாம் சித்பொருளை

புலன்தாண்டி உணர்வதற்கு உற்றநிலை வாய்த்திடுமோ


வாய்த்தவுயிர்த்    துகளதனில் உடற்கூற்றை முடிச்சிட்டு

தூயத்தபருப் பொருளதனில் சூக்குமங்கள் பிணைத்திருத்தி

வேய்த்தவிழுப் பொருளெனவே விளங்குகின்ற விண்ணரசை

காய்த்தமனம் கனிந்தேத்தி கதியுறுமோ என்னுயிர்மூச்சு




--0--







வியாழன், 18 ஏப்ரல், 2013

Some Portions from 'The Sunlit Path' - By Annai Mira Alfassa



ஒளி பொருந்திய பாதை

அஞ்சாமை , நீடித்துழைக்கும் திறன், முயற்சி


அச்சம் ஒரு மாசு. பெரும்  மாசுகளுள் ஒன்று . புவியில்
இறைவனது செயல் நிறைவேறவிடாமல் அதை அழித்துவிட
விரும்பும் தெய்வ விரோத சக்திகளிடமிருந்து நேரடியாக
வருகின்றவற்றுள் ஒன்று அச்சம். உண்மையாகவே, யோகம் 
          செய்ய விரும்புகிறவர்களின் முதல் வேலை தங்களுடைய முழு

          பலத்தோடும் முழு நேர்மையோடும் நீடித்துழைக்கும் திறம்

          முழுவதுடனும் அச்சத்தின் நிழல்கூட தங்கள் உணர்வில் இல்லாதபடி

          அகற்றுவதாகவே இருக்கவேண்டும். யோகபாதையில் 

          செல்லவேண்டுமானால்  ஒருவன் அச்ச்மற்றவனாக இருக்க

          வேண்டும். அற்பமான , அருவருப்புண்டாக்குகிற  , பலவீனமான ,

          அச்சம் என்னும் சிறுமைக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது


           எதற்கும் அஞ்சாத துணிவு, பூரணமான நேர்மை , இலாப நஷ்டக்

           கணக்குப்பார்காத, ஒன்றையும் எதிர்பார்த்துச்  செய்யாத சமர்ப்பணம்

           பாதுகாப்புக்  கிடைக்கும் என்று எண்ணி வைக்காத நம்பிக்கை ,

           நிரூபணம் கேட்காத விசுவாசம்  -  யோக பாதையில் நடக்க தேவை

           இதுவே. இது ஒன்றே உன்னை எல்லா ஆபத்துகளிலிருந்தும்

           பாதுகாக்கும்      

         
அச்சம் இறைவன் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது

           ஒருவன் அஞ்சுவதற்கு காரணம் என்ன ?.

           தன்னைப்பற்றி அதிகமாக நினைப்பதால் என்று சொல்லலாம்.

           அச்சம்  உண்டாவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது 

           தன்னுடைய பாதுகாப்பைப்பற்றி  அளவுக்கு அதிகமாகக்

           கவலைப்படுவது. அடுத்தபடியாக, தான் அறியாத ஒன்று ஒரு

           வகையான   கலக்கத்தைக் கொடுக்கிறது. அது உணர்வில் அச்சமாக 

           வெளிப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக , இறைவன் மீது 

           இறைவன் மீது இயல்பான ஒரு நம்பிக்கை வைக்கும் பழக்கம் இன்மை .

 
           ஆழ்ந்து நோக்கினால் இதுவே உண்மையான காரணம் என்பது

           புரியும். பரம்பொருள் என்று ஒன்று இருப்பதையே அறியாத மனிதர்கள் 

           இருக்கிறார்கள். அவர்களிடம் வேறுவிதமாக இப்படி சொல்லலாம் :

           " உங்களுடைய நல்லூழில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை " என்றோ 

           " அருளைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது " என்றோ 

           சொல்லலாம். அதை நீ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

           ஆனால்   அதன் அடிப்படை விஷயம் இதுவே. எந்தச் சூழ்நிலையிலும் 

           உனக்கு எது மிகவும் நல்லதோ அதுவே நடக்கிறது என்கிற உணர்வு 

           உன்னிடம் எப்பொழுதும் இருக்குமானால், நீ அச்சம் கொள்ள மாட்டாய் . 


அச்சத்தை வெல்லும் வழி

            அச்சத்தை வெல்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று நீ எதைக்கண்டு

            அஞ்சுகிறாயோ அதைத் துணிவோடு எதிர்கொள்வதுதான். நீ எந்த 

            அபாயத்தைக் எண்ணி  அஞ்சுகிறாயோ  அதை நேருக்கு நேர்

            சந்திக்கும்போது நீ அஞ்சுவதில்லை.  யோகா நோக்கிளிருந்தும்

            சுயக்கட்டுப்பாட்டின் நோக்கிலிருந்தும் அச்சத்தைப் போக்குவதற்கு

            மருந்தாக சிபாரிசு செய்யப்படுவது இதுதான்.


 உண்மையான அஞ்சாமை

            அதன் ஆழ்ந்த பொருளில் உண்மையான அஞ்சாமை என்பது

            எதையும், வாழ்க்கையில் நேரக்கூடிய  எதையும், சிறிய விஷயங்கள்

            முதல் பெரிய விஷயங்கள் வரை , சாதாரண அன்றாட வாழ்க்கைக்

            குரிய விஷயங்கள் முதல் ஆன்மீக விஷயங்கள் வரை நடுக்கமின்றி

            இதயம் படபடக்காமல் நரம்புகளில் பதட்டமின்றி, ஜீவனின் எந்தப்

            பாகத்திலும் கிளர்ச்சியில்லாத முறையில் எதிர்கொள்ள முடிவதுதான் .

            இடைவிடாத இறைவனின் சாநித்ய உணர்வுடன் , முற்றிலும் உன்னை

            இறைவனுக்கு அர்பணித்து , ஜீவன் முழுவதும் அந்தச் சங்கற்பத்தில்

            ஒருங்கிணைந்து , எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டும்.

            அப்படிச் செய்தால் நீ வாழ்வில் வெகு வேகமாக முன்னேறிச்

            செல்லலாம். எதைவேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் . 

            நடுக்கமின்றி, அதிர்ச்சியின்றி எதிர்கொள்ள வேண்டும் என்றேன்.

            ஒருவன் விசேஷ அருளுடன் பிறந்திருக்காவிட்டால் , பிறவியிலேயே

            இத்தன்மையைப்  பெற்றிருக்காவிட்டால் நீண்ட முயற்ச்சியின்

             மூலமே இந்த நிலையை அடைய முடியும். பிறவியிலேயே அப்படி

            இருப்பது மிக மிக அருமை .  
            
     

--0--



வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

An advise to the heart

 

நெஞ்சினுக் குபதேசம்

ராகம் - ஹரிகாம்போதி                                                                  தாளம் - திஸ்ரம்

நடை - தனதனன  தனதனன தனதனன தனதனன


தந்தையின்  வித்தினொடு தாயவளின் சாகினுக்குள்

விந்தையென சினைசேர்த்து அணுவாக்கி   உயிரளித்து,

வந்துலவும் கிருமிகளின் செருவினின்று  பிழைக்கவைத்து,

முந்தைவினைப்  பகுத்தெடுத்து உயிர்த்துகளில் பதித்துவைத்து !


மாயையெனும் உடமைகொண்டு மாற்றமற உடலமைத்து

தாயவளின் உதரமதில் பத்துத்திங்கள் பார்த்திருந்து 

நேயமுடன் மண்ணளிக்கும்  பரம்பொருளைப் பற்றுவது

சாய்ந்தமனம் கொண்டவர்க்கு அத்தனைக்கு எளிதல்ல !



மேவவரும் புலனின்பம் முழுவதையும்  முறைதுறந்து 

தாவலிலா  தகவமைந்த  இதயமெனும்  வீடமைத்து  

ஆவலினால்  அலகுமிட்டு  தூவுணர்வு   மலர்தூவி   

மாவயிரம்  ஆங்கவனை  மாண்புடனே எழுப்புவித்து    !



நினைவதுவே தொழுகையென ஒன்றித்து ஒழுகிடுவாய் 

புனைந்துவளர் பக்குவத்தை பரமனவன் உணர்ந்தெழுவான்   

வினையகற்றி அகம்குளிர்ந்துன் அன்புவலை அகப்படுவான்

மனைவிளங்க  உயர்நிறுத்தி  வீடுறவே, கூட்டுவிப்பான் !


புல்நுனியில் பனியானால் பகலவனால் போக்குறுவாய்

கல்லிடையில் ஊற்றானால் நீர்நிலையாய்ப் பயன்தருவாய் 

வல்லாழிக் குள்வீழ்ந்த நன்மழையின் துளியானால் 

எல்லைமிகு கடல்கலந்து கடலெனவே பெயர்பெருவாய்   !


நீங்காத நின்மலனின் ஆக்கங்கள் அறிந்திடுவாய்  

பூங்கமலப் பொற்பாதம்  தாங்கிடுமிப்  புவனங்களை  

யாங்கணுமே நிறைந்திலங்கும்   ஆனந்த  வெள்ளமவன்  

பாங்குடனே  பைந்தமிழில் பண்கொண்டு  பரவிடுவாய்  !


ஒன்றெனவும், வேறெனவும், உடனெனவும் இருந்துஉனைச் 

சென்றேகும்  வகையருளும்  ஒண்பொருளை உண்மையனை

மன்றிலங்கும்  தொன்மையனை நொடிவிலக லில்லானை 

நன்றியுடன்   நேர்ந்திருப்பாய்  நேயமுடன் சார்ந்திருப்பாய் !


தஞ்சமென வந்தவர்க்கு தண்ணளிக்கும்  வள்ளலவன்

அஞ்சலற நித்தியத்தில்  நினையிருத்தி  நெறியருள்வான்

வஞ்சமறப் பருக்கோள்கள் பறந்துலவப்  பாதைசெயும்   

துஞ்சலிலாத்  தூயனுந்தன் உயிருறையும்  உயிராவான்   !


திண்ணமாயிம் மண்ணிலுண்டு வேண்டுவன அத்தனையும்

பண்டேயுன் உள்ளுறையும் பரமனவன் குணம்கொள்வாய் !

கண்ணுற்ற    உயிர்களைநீ   கருணையுடன் அறம்செய்வாய்   

எண்ணமதில் அசைவொழிந்து   பூரணனைப் போற்றிடுவாய்  


உருக்கொளும் உயிர்தொடங்கி பருக்கோளின் பான்மைவரைத்

திருக்குழகன் வனைந்தமைத்த வியாபகத்துள் வியாப்பியமே  

அருவாயும்   உருவாயும்   அருவுருவம்  அதுவாயும்  

பெருநெறியோ டவன்புரியும் திருநடமே யீங்கனைத்தும் !


வியாழன், 31 ஜனவரி, 2013

Sivan worshiped by Owvaiyaar

சிவனைப்பாடும் ஔவைபிராட்டி 

1. ஆத்திசூடி


30. அரனை மறவேல்.

2. கொன்றை வேந்தன்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

80. மோனம் என்பது ஞான வரம்பு.

89. வைகல் தோறும் தெய்வம் தொழு.

4. நல்வழி


சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும். 15



நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்

ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்

உடன்பிறப் பில்லா உடம்புபாழ்  பாழே

மடக்கொடி இல்லா மனை. 24



ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல். 27



வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்

கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே

விண்ணுறுவார்க் கில்லை விதி. 37



(உலகியபில் நின்றோர்க்கு வினை அடுமே அல்லது இறைவன் திருவடி பற்றி விண்ணுறுவார்க்கு இல்லை விதி என்றவாறூ)



நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை

தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்

போனவா தேடும் பொருள். 38



தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். 40




வெள்ளி, 28 செப்டம்பர், 2012

Some verses from Thiru Thondar Puraanam














திருத்தொண்டர் புராணத்திலிருந்து சில பாடல்கள்










உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்;
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.


எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.


மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.


அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.


தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்.


செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்.


மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை.


அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே.


இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.


என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்




Thiru Mandhram by Thirumoolar (paayiram)












திருமூலர் அருளிய திருமந்திரம் (பாயிரம்)


விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.






பாயிரம்

1. கடவுள் வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1


போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை

நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை

மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்

கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2


ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்

நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்

பக்கநின் றார்அறி யாத பரமனைப்

புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3


அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்

புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்

பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி

இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4


சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்

தவனச் சடைமுடித் தாமரை யானே. 5






அவனை ஒழிய அமரரும் இல்லை

அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை

அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6


முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்

தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்

தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்

பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7


தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை

சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8


பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்

பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி

என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்

தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9


தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்

தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்

தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்

தானே தடவரை தண்கட லாமே. 10


அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை

முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே

பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11


கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்

எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்

மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்

அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12


மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்

எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை

விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை

கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13


கடந்துநினின் றான்கம லம்மல ராதி

கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்

கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்

கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14


ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற

வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்

சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்

நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15


கோது குலாவிய கொன்றைக் குழற்சடை

மாது குலாவிய வாள்நுதல் பாகனை

யாது குலாவி அமரரும் தேவரும்

கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16


காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்

மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி

தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்

ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17


அதிபதி செய்து அளகை வேந்தனை

நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி

அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்

இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18


இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்

முதுபதி செய்தவன் மூதறி வாளன்

விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி

அதுபதி யாக அமருகின் றானே. 19


முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

அடிகள் உறையும் அறனெறி நாடில்

இடியும் முழக்கமும் ஈசர் உருவம்

கடிமலர்க் குன்ற மலையது தானே. 20


வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்

ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்

கானக் களிறு கதறப் பிளந்தனம்

கோனைப் புகழுமின் கூடலு மாமே. 21


மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்

நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்

எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்

பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 22


வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்

நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை

இல்லென வேண்டா இறையவர் தம்முதல்

அல்லும் பகலும் அருளுகின் றானே. 23


போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி

தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்

ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை

மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 24


பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்

இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்

துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்

மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. 25


தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்

படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்

கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே

உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. 26


சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து

அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று

நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்

புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 27


இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்

பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்

உணங்கிநின் றான்அம ராபதி நாதன்

வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 28


காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்

நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்

கோணநில் லாத குணத்தடி யார்மனத்து

ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. 29


வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்

தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்

ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை

நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. 30


மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்

விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்

பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே

கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 31


தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்

மேவு பிரான்விரி நீருலகேழையும்

தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை

பாவு பிரான்அருட் பாடலு மாமே. 32


பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்

விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 33


சாந்து கமழுங் கவா஢யின் கந்தம்போல்

வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி

ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்

போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34


ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்

போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்

மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு

மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. 35


அப்பனை நந்தியை ஆரா அமுதினை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை

எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36


நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்

தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்

வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து

ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 37


பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்

பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்

பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்

பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 38


வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்

ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39


குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்

நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்

மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்

புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40


சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்

புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்

கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே

இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. 41


போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது

நாயக னான்முடி செய்தது வேநல்கும்

மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்

வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. 42


அரனடி சொல்லி அரற்றி அழுது

பரனடி நாடியே பாவிப்ப நாளும்

உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு

நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 43


போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி

போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி

போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி

போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44


விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்

விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை

துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்

பதிவழி காட்டும் பகலவ னாமே. 45


அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று

சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ

முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று

புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. 46


மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்தது போல

நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. 47


அடியார் பரவும் அமரர் பிரானை

முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்

படியால் அருளும் பரம்பரன் எந்தை

விடியா விளக்கென்று மேவிநின் றேனே. 48


நரைபசு பாசத்து நாதனை உள்ளி

உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத்

திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்

கரைபசு பாசம் கடநது எய்த லாமே. 49


சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று

பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்

றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று

நாடுவன் நான்இன் றறிவது தானே. 50



2.. வேதச் சிறப்பு

(வேதத்தின் பெருமை)


வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 1


வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்

வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2






இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே

உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி

வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்

கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. 3


திருநெறி யாவது சித்தசித் தன்றிப்

பெருநெறி யாய பிரானை நினைந்து

குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்

ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4


ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்

கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை

வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்

பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 5


பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்

ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்

வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்

ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. 6


.3.. ஆகமச் சிறப்பு

(ஆகமத்தின் பெருமை)


அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்

அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 1






அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. 2


பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்

கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க

பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 3


அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி

தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 4


பரனாய் பராபரம் காட்டி உலகில்

தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்

தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி

உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 5


சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற

நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. 6


பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்

உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்

மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்

துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 7


அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 8


மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று

ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து

ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 9


அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே. 10


.4.. குரு பாரம்பரியம் (குரு மரபு)


நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே. 1


நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. 2







மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு

இந்த எழுவரும் என்வழி யாமே. 3


நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்

நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. 4


மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்டகி லானே. 5


எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்

செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே

அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே. 6


.5.. திருமூலர் வரலாறு

(ஆசிரியர் வரலாறு)


நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்

தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்

சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. 1






செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே. 2


இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே

பொருந்திய செல்வப் புவனா பதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்

பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. 3


சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி

உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். 4


மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நோ஢ழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. 5


நோ஢ழை யாவாள் நிரதிச யானந்தப்

பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்

சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை

சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே. 6


சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை

சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்

சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 7


இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. 8


பின்னைநின்று என்னே பிறவி பெறுவது

முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. 9


ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு

ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்

ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து

நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. 10


செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்

வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப்

பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்

ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே. 11


சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்

உத்தம மாகவே ஓதிய வேதத்தின்

ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி

அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. 12


யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 13


பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்

சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி

மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை

உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. 14


அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்

எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்

தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்

பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 15


அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி

அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல

முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. 16


பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற

தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து

அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்

நற்பத முமளித் தானெங்கள் நந்தியே. 17


நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை

மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை

ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர

வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. 18


விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி

அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி

துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து

வளப்பில் கயிலை வழியில்வந் தேனே. 19


நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நானிருந் தேனே. 20


இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆரழல் வீச

உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 21


பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை

இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்

முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை

இயற்றிகழ் சோதி இறைவனு மாமே. 22


.6.. அவையடக்கம்


ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை

யாரறி வார்இந்த அகலமும் நீளமும்

பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேரறி யாமை விளம்புகின் றேனே. 1


பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்

ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்

நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்

தேடவல் லார்நெறி தேடகில் லேனே. 2


மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்

பின்னை உலகம் படைத்த பிரமனும்

உன்னும் அவனை உணரலு மாமே. 3


தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்

இத்துடன் வேறா இருந்து துதிசெயும்

பத்திமை யால் இப் பயனறி யாரே. 4



7.. திருமந்திரத் தொகைச் சிறப்பு


மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1


வைத்த பரிசே வகைவகை நன்னூலின்

முத்தி முடிவிது மூவா யிரத்திலே

புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது

வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2


8.. குரு மட வரலாறு


வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை

தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்

சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 1


கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்

நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்

புலங்கொள் பரமானந் தர்போக தேவர்

நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 2



9.. திரு மும்மூர்த்திகளின் முறைமை


அளவில் இளமையும் அந்தமும் ஈறும்

அளவியல் காலமும் நாலும் உணா஢ல்

தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்

அளவில் பெருமை அரியயற் காமே. 1


ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்

பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 2


ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்

பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது

ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்

தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 3


சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. 4


பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்

அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை

நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்

வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே. 5


ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ

மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ

ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. 6


வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்

தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது

தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை

ஊனமர்ந் தோரை உணர்வது தானே. 7


சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற

ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்

நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று

பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. 8


பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி

வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்

தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்

கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. 9


தானொரு கூறு சதாசிவன் எம்மிறை

வானொரு கூறு மருவியும் அங்குளான்

கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற

தானொரு கூறு சலமய னாமே. 10



--0--




Some verss from Thiruvasagam, Thiruvisaippa and Thiruppallandu






திருமுன் பாட திருமுறைப் பாடல்கள் சில


Index
----------------------------------------------------------------------------------------------

திருவாசகம்

              1.    சிவபுராணம்

              2.    திருவெம்பாவை

              3.    திருச்சாழல்

              4.    திருப்பொன்னூசல்

              5.    திருப்பள்ளியெழுச்சி

              6.    அருட்பத்து

              7.    பிடித்தப்பத்து

திருவிசைப்பா - திருமளிகத்தேவர் 

திருப்பல்லாண்டு - சேந்தனார்



----------------------------------------------------------------------------------------------












திருவாசகச் சிறப்பு

தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே

எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்

எங்கோன் திருவாசகமேன்னும் தேன்


1. சிவபுராணம்

 
(திருப்பெருந்துறையில் அருளியது

தற்சிறப்புப் பாயிரம்)


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5



வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10



ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15



ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20



கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25



புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30



எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற



மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35



வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40



ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45



கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50



மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55



விலங்கு மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60



தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65



பேராது நின்ற பெருங்கருணைப் போராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70



அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75



நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80



மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90



அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்




2. திருவெம்பாவை

 
(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)
(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155



பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156



முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157





ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ

எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158



மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159



மானே நீ நென்னலை நாளை வந்துங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160

 




அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்

தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்

என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்

சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161



கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162



முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்

இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163





பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்

கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்

ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164



மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்

கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி

ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்

செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளர்

ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்

எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165



ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்

தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166





பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த

பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்

கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167



காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்

சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்

ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169

 




முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்

மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170



செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்

எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171



அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று

அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173



போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174

திருச்சிற்றம்பலம்


3. திருச்சாழல்

( சிவனுடைய காருணியம்)


(தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255



என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்

துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?

மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்

தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256



கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்

காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257



அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை

வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ

நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்

சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258



தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம்

தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?

தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு

எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259



அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்

நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?

நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்

சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260



மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி

சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?

சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்

பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261



கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த

ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?

ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட

மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262



தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்

பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ

பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்

விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263



தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்

வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264



நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து

கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ

கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்

தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265



கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி

ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?

ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்

வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266



மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை

உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ

உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்

கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267



தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்

தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?

தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்

ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268



கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே

இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ

தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269



நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை

அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ

அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்

கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270



அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்

நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?

நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ

எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271



சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி

நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?

நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்

அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272



அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்

எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ

எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்

தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273



அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்

இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?

அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்

திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274

திருச்சிற்றம்பலம்


4. திருப்பொன்னூசல்


( அருட் சுத்தி)

(தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)



சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்

போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329



மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத

வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்

தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு

ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்

கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை

போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330



முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்

பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்

தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து

மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை

மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்

பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331



நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்

மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை

அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்

நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து

துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்

புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332



ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்

காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்

நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை

ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்

கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்

பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333



மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்

தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்

தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்

காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்

போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334



உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை

மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்

அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்

என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்

பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335



கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்

சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து

ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்

சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை

மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்

பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336



தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்

பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட

கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்

பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337

திருச்சிற்றம்பலம்


5. திருப்பள்ளியெழுச்சி


(  திரோதான சுத்தி )

(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )



போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறை உறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 368



அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருனையின் சூரியன் எழவெழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே

அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 369



கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளியொளி உதயத்து

ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 370



இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 371



பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 372



பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர்

பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்

மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்குகின்றார் அணங் கின்மண வாளா

செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 373



அது பழச்சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்

மதுவளர் பொழில்திரு உத்தர கோச

மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா

எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 374



முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்

ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே. 375



விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே

கடலமு தேகரும் பேவிரும் படியார்

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376



புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்

அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377

திருச்சிற்றம்பலம்

6. அருட்பத்து


(  மகாமாயா சுத்தி )
(திருப்பெருந்துறையில் அருளியது -

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)



சோதியே சுடரே சூழொளி விளக்கே

         சுரிசூழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்

         பங்கயத் தயனுமா லறியா

நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்

         நிறைமலர்க் குருந்தமே வியசீர்

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

        அதெந்துவே என் றரு ளாயே. 458



நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்

        கண்ணனே விண்ணுளோர் பிரானே

ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி

        உலகெலாந் தேடியுந் காணேன்

திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்

        செழுமலர்க் குருந்தமே வியசீர்

அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால்

        அதெந்துவே என்றரு ளாயே. 459



எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா

        ஏலவார் குழலிமார் இருவர்

தங்கள் நாயகனே தக்கநற்காமன்

        தனதுடல் தழலெழ விழித்த

செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்

       செழுமலர்க் குருந்தமே வியசீர்

அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்

       அதெந்துவே என்றருளாயே. 460



கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்

        கண்ணனும் நண்ணுதற்கரிய

விமலனே எமக்கு வெளிப்படா யென்ன

       வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்

திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்

       செழுமலர்க் குருந்தமே வியசீர்

அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்

       அதெந்துவே என்றரு ளாயே. 461



துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை

        துணைமுலைக் கண்கள்தோய் சுவடு

பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு

        பொங்கொளி தங்குமார் பின்னே

செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில்

         செழுமலர்க் குருந்தமே வியசீர்

அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்

          அதெந்துவே என்றரு ளாயே. 462



துப்பனே தூயாய் தூய  வெண்ணீறு

          துதைந்தெழு துளங்கொளி வயிரத்

தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்

          உறுசுவை துளிக்கும் ஆரமுதே

செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்

         செழுமலர்க் குருந்தமே வியசீர்

அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்

         அதெந்துவே என்றரு ளாயே. 463



மெய்யனே விகிர்தா மேருவே வில்லா

         மேலவர் புரங்கள் மூன்றெரித்த

கையனே காலாற் காலனைத் காய்ந்த

         கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்

செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்

         செழுமலர்க் குருந்தமே வியசீர்

ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்

         அதெந்துவே என்றரு ளாயே. 464



முத்தனே முதல்வா முக்கணா முனிவா

         மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்

          பரகதி கொடுத்தருள் செய்யுஞ்

சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்

          செழுமலர்க் குருந்தமே வியசீர்

அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்

          அதெந்துவே என்றரு ளாயே. 465



மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி

          மறுமையோ டிம்மையுங் கெடுத்த

பொருளணே புனிதா பொங்குவா ளரவங்

          கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்

தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்

          செழுமலர்க் குருந்தமே வியசீர்

அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்

          அதெந்துவே என்றரு ளாயே. 466



திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்

          செழுமலர்க் குருந்தமே வியசீர்

இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்

          டென்னுடை யெம்பிரான் என்றென்

றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்

          அலைகடல் அதனுளே நின்று

பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்

           போதராய் என்றளு ளாயே. 467

திருச்சிற்றம்பலம்


7. பிடித்த பத்து


(  முத்திக்கலப்புரைத்தல் )
(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)

 
உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே

           ஊற்றை  யேன் தனக்கு

வம்பெனப் பழுத்தென் குடிமுழு  தாண்டு

           வாழ்வற வாழ்வித்த மருந்தே

செம்பொருட் டுணிவே சீருடைக்  கழலே

            செல்வமே சிவ  பெருமானே

எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

           எங்கெழுந் தருளுவ தினியே.



விடைவிடா துகந்த விண்ணவர் கோவே

           வினையனே னுடையமெய்ப் பொருளே

முடைவிடா தடியேன் மூத்தற  மண்ணாய்

           முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து

கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட

           கடவுளே கருணைமா கடலே

இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

            எங்கெழுந் தருளுவ தினியே. 537



அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

             அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

             புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

              செல்வமே சிவ  பெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

              எங்கெழுந் தருளுவ தினியே. 538



அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே

              பெருந்திறல் அருந்தவர்க் கரசே

பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த

              போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த

              செல்வமே சிவ  பெருமானே

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 539



ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்


               உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய

               தளித்த  தோர் அன்பே

செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ

               செல்வமே சிவ  பெருமானே

எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 540



அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு

              அளவிலா ஆனந்த மருளிப்

பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட

              பிஞ்ஞகா பெரியஎம் பெருளே

திறவிலே கண்ட காட்சியே அடியேன்

               செல்வமே சிவ  பெருமானே

இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 541



பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்

               பற்றுமா றடியனேற் கருளிப்

பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து

               பூங்கழல் காட்டிய பொருளே

தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ

               செல்வமே சிவபெருமானே

ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 542



அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற

              ஆதியே யாதும்ஈ றில்லாச்

சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த

              செல்வமே சிவ  பெருமானே

பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்

              பிழைத்தவை அல்லையாய் நிற்கும்

எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

              எங்கெழுந் தருளுவ தினியே. 543



பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்

               பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

               உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்  திரிந்த

               செல்வமே சிவ பெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 544



புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்

                பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட

                ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந்

               தொடக்கெலாம் அறுத்தநற்  சோதி

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 545

திருச்சிற்றம்பலம்






திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பா




1. கோயில்

ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !

       உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !

       சித்தத்துள் தித்திக்கும் தேனே !

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
       அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
       தொண்டனேன் விளம்புமா விளம்பே. 1

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
       இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும்
       தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
       அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
       தொண்டனேன் பணியுமா பணியே. 2

தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !
       சாமகண்டா ! அண்ட வாணா !

நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை

       என்னுடை நாவினால் நவில்வான்

அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்

       தந்தபொன் அம்பலத்து ஆடி !

கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்

       தொண்டனேன் கருதுமா கருதே. 3


பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்

       பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !

கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்

       மகள்உமை யவள்களை கண்ணே !

அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்

       அப்பனே அம்பலத்து அமுதே

ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்

       தொண்டனேன் உரைக்குமாறு உரையே. 4


கோலமே மேலை வானவர் கோவே !

       குணங்குறி இறந்ததோர் குணமே !

காலமே கங்கை நாயகா எங்கள்

       காலகா லா! காம நாசா !

ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்

       கோயில்கொண்டு ஆடவல் லானே !

ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்

       தொண்டனேன் நணுகுமா நணுகே. 5


நீறணி பவளக் குன்றமே ! நின்ற

       நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !

வேறணி புவன போகமே யோக

       வெள்ளமே மேருவில் வீரா !

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா

       அம்பொன்செய் அம்பலத் தரசே !

ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத்

       தொண்டனேன் இசையுமாறு இசையே. 6


தனதன்நல் தோழா சங்கரா ! சூல

       பாணியே! தாணுவே சிவனே !

கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே

       கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !

அனகனே குமர விநாயக சனக

       அம்பலத்து அமரசே கரனே !

உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்

       தொண்டனேன் நுகருமா நுகரே. 7


திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே

       திகைக்கின்றேன் தனத்திகை யாமே

நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்

       நிகழ்வித்த நிகரிலா மணியே !

அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்

       ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !

புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்

       தொண்டனேன் புணருமா புணரே. 8


தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்

       தாமரை நான்முகன் தலையும்

ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்

       நெறித்தரு ளியவுருத் திரனே !

அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட

       ஆடம்பொன் னம்பலத்து ஆடும்

சொக்கனே ! எவர்க்கும் தொடர்வரி யாயைத்

       தொண்டனேன் தொடருமா தொடரே. 9


மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு

       அருள்புரி வள்ளலே ! மருளார்

இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்

       ஏறிய ஏறுசே வகனே !

அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்

       அடர்த்தபொன் னம்பலத் தரசே !

விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத்

       தொண்டனேன் விரும்புமா விரும்பே. 10


மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது

       அயன்திரு மாலொடு மயங்கி

முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை

       மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்

அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்

       சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்

நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்

       தொண்டனேன் நினையுமா நினையே. 11


திருச்சிற்றம்பலம்


--0--





10. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு



கோயில் மன்னுக




மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

       வஞ்சகர் போயகல

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

       புவனி யெல்லாம் விளங்க

அன்னநடை மடவாள் உமைகோன்

       அடியோ முக்கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த

       பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1


மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள்

       விரைந்து வம்மின்

கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)

       ஆட் செய்மின் குழாம்புகுந்து

அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்

       ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்

       என்றே பல்லாண்டு கூறுதுமே. 2


நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட

       நிகரிலா வண்ணங்கள்

சிட்டன் சிவனடி யாரைச்

       சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)

அட்ட மூர்த்திக்கென் அகம்நெக

       ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்

பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3


சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த

       தூய்மனத் தொண்டருள்ளீர்

சில்லாண் டிற்சிறை யும்சில

       தேவர் சிறுநெறி சேராமே

வில்லாண் டகன கத்திரன்

       மேரு விடங்கன் விடைப்பாகன்

பல்லாண் டென்னும் பதங்கடந்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4


புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)

       ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்

இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட

       கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்

கரந்துங் கரவாத கற்பக

       னாகிக் கரையில் கருணைக்கடல்

பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்

       பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5


சேவிக்க வந்தயன் இந்திரன்

       செங்கண்மால் எங்கும்திசை திசையென

கூவிக் கவர்ந்து நெருங்கிக்

       குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்

ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்

       தனத்தினை அப்பனை ஒப்பமார்

பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6


சீரும் திருவும் பொலியச் சிவலோக

       நாயகன் சேவடிக்கீழ்

ஆரும் பெறாத அறிவு பெற்றேன்

       பெற்றதார் பெறுவார் உலகில்?

ஊரும் உலகும் கழற உளறி

       உமைமண வாளனுக்(கு)ஆம்

பாரும் விசும்பும் அறியும்

       பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7


சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங்

       கொங்கையில் செங்குங்குமம்

போலும் பொடியணி மார்பிலங் குமென்று

       புண்ணியர் போற்றிசைப்ப

மாலும் அயனும் அறியா நெறி

       தந்து வந்தென் மனத்தகத்தே

பாலும் அமுதமு ஒத்துநின்

       றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8


பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப்

       பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

       மன்னிய தில்லைதன்னுள்

ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற

       சிற்றம் பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல்

       லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9


தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)

       இவ் அண்டத்தொடும் உடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற்

       கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும்

       தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10


குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி

       எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று

       விம்மி மிகுதிரு ஆருரின்


மழவிடை யாற்கு வழிவழி யாளாய்

       மணஞ்செய் குடிப்பிறந்த

பழஅடி யாரொடுங் கூடி

       எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11


ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில்

       அணியுடை ஆதிரைநாள்

நாராயணனொடு நான்முகன் அங்கி

       இரவியும் இந்திரனும்

தேரார் வீதியில் தேவர் குழாங்கள்

       திசையனைத்தும் நிறைந்து

பாரார் தொல்புகழ் பாடியும்

       ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12


எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு

       அமுதாம் எம்பிரான் என்றென்று

சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார்

       அடிநாய் செப்புறை

அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ்

       தாண்டுகொண் டாருயிர்மேல்

பந்தம் பிரியப் பரிந்தவனே

       என்று பல்லாண்டு கூறுதுமே. 13.


திருச்சிற்றம்பலம்


--0--

கருவூரார்